தேவாலயத்தில் கூடு கட்டிய விஷ வண்டுகள் அழிப்பு

திருவாடானை, ஏப்.10: திருவாடானை அருகே கிறிஸ்தவ தேவாலயத்தில் கூடு கட்டிய விஷ வண்டுகள் தீ வைத்து அழிக்கப்பட்டது. திருவாடானை அருகே அறநூற்றிவயல் கிராமத்தில் புனித அந்தோணியார் தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயத்தின் ஒரு பகுதியில் கடந்த சில தினங்களாக விஷ வண்டுகள் கூடு கட்டியதோடு அவ்வழியாக செல்லும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் தொல்லை கொடுத்துள்ளது. இது குறித்து தேவாலய நிர்வாகத்தினர், திருவாடானை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் கொடிய விஷத்தன்மை கொண்ட வண்டுகளை தீ வைத்து அழித்து விட்டனர்.

The post தேவாலயத்தில் கூடு கட்டிய விஷ வண்டுகள் அழிப்பு appeared first on Dinakaran.

Related Stories: