இளைஞர்களிடையே தொழில் முனைவு சிந்தனையை ஊக்குவிக்க 2000 உயர்கல்வி நிறுவனங்களில் ‘நிமிர்ந்து நில்’ திட்டம்: 43 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் தா.மோ.அன்பரசன்

* 18 சிட்கோ தொழிற்பேட்டை ரூ.40 கோடியில் மேம்படுத்தப்படும்

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மானிய கோரிக்கை மீதான விதாதத்திற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவை பின்வருமாறு:
* குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் 10 விழுக்காடு கூடுதல் முதலீட்டு மானியத்தின் உச்சவரம்பு ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.
* உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் மூலம் 5 தனித்துவமான தயாரிப்புகளுக்கு பொதுவான வணிக குறியீடு ரூ.3.62 கோடியில் உருவாக்கப்படும்.
* 60 வயதிற்கு உட்பட்ட இருளர் பாம்பு பிடிப்போர் தொழிற்கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு விபத்து மற்றும் பாம்புகடியினால் ஏற்படும் உயிரிழப்பிற்கு இழப்பீடாக ரூ.20 லட்சம் வழங்க ஏதுவாக ரூ.1.50 கோடி மதிப்பில் மூலதன நிதியம் உருவாக்கப்படும்.
* தென்னை நார் உற்பத்தியில் மதிப்பு கூட்டலை ஊக்குவிக்கும் விதத்தில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு மேம்பாட்டு மையம் ரூ.9.86 கோடியில் ஏற்படுத்தப்படும்.
* தொழிற்கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் பணிபுரியும் 20 பணியாளர்களுக்கு பிற மாநில தேயிலை தொழிற்சாலைகளில் திறன் மேம்பாட்டு பயிற்சி ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அளிக்கப்படும்.
* தொழிற்கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு பசுந்தேயிலை வழங்கும் உறுப்பினர்கள் கூடுதலாக பசுந்தேயிலை வழங்குவதை ஊக்குவிக்கும் வகையில் ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் ரூ.4 லட்சம் மதிப்பில் செயல்படுத்தப்படும்.
* நடப்பாண்டில் 6 விற்பனையாளர் மேம்பாட்டு நிகழ்வுகள் ரூ.40 லட்சம் மதிப்பிட்டில் நடத்தப்படும். அவற்றுள் ஆதிதிராவிட/ பழங்குடியின தொழில் முனைவோருக்கு என இரண்டு தனி சிறப்பு நிகழ்வுகள் நடத்தப்படும்.
* ஏற்றுமதி நிறுவனங்களுக்கு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது சிப்பமிடும் முறைகள் குறித்து ரூ.30 லட்சம் மதிப்பில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படும்.
* மின்னணு வர்த்தக தளங்களில் கைவினை கலைஞர்கள் உள்ளிட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை, பதிவேற்றம் செய்து அவர்களது உற்பத்தி பொருட்களை சந்தைப் படுத்துவதற்கு வசதி செய்து தரப்படும்.
* டெல்டா மாவட்டங்களை சேர்ந்த 120 இளைஞர்களுக்கு ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் உணவு பதப்படுத்தும் தொழில் தொடங்க தேவையான திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும்.
* உணவுத் தொழில்நுட்பம் மற்றும் வேளாண் துறை சார்ந்த 25 வேளாண் மற்றும் உணவுத் தொழில்நுட்ப பட்டதாரிகளுக்கு ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும்.
* கவரிங் நகை தொழில் புகழ்பெற்ற சிதம்பரம் பகுதியில், லால்புரம் கிராமத்தில் கவரிங் நகை உற்பத்தியாளர்களுக்காக 5 ஏக்கர் பரப்பளவில் ரூ.1.24 கோடி திட்ட மதிப்பில் தமிழ்நாடு சிட்கோ மூலம் சிறப்பு புதிய தொழிற்பேட்டை அமைக்கப்படும்.
* வேளாண் பொருட்கள் உற்பத்தி சார்ந்த தொழில் முனைவோர்களுக்கு உதவிடும் வகையில் ஈரோடு சிட்கோ தொழிற்பேட்டை பகுதி 2ல், 20 ஏக்கர் பரப்பளவில் ரூ.15.23 கோடி திட்ட மதிப்பில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு ஒதுக்கீடு செய்யப்படும்.
* அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், பரணத்தில் ரூ.2.84 கோடி திட்ட மதிப்பில் நவீன முந்திரி பதப்படுத்தும் குழுமம் அமைக்கப்படும்.
* திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், முசிறியில் ரூ.3 கோடி திட்ட மதிப்பில் கோரைப்பாய் குழுமம் அமைக்கப்படும்.
* ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், சீனாபுரத்தில் ரூ.7.77 கோடி திட்ட மதிப்பில் நெசவு குழுமம் அமைக்கப்படும்.
* சென்னை மாவட்டம், பெரம்பூரில் ரூ.5 கோடி திட்ட மதிப்பில் வெள்ளி கலை பொருட்கள் குழுமம் அமைக்கப்படும்.
* திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் வட்டம், கல்லிப்பாளையம் கிராமத்தில் ஆப்செட் பிரின்டிங் மற்றும் புக் பைண்டிங் குழுமத்திற்கான பொது வசதி மையம் ரூ.31.75 கோடி திட்ட மதிப்பு நிறுவப்படும்.
* திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், பெருமாபாளையம் கிராமத்தில் அச்சு குழுமத்திற்கான பொது வசதி மையம் ரூ.29.93 கோடி திட்ட மதிப்பில் நிறுவப்படும்.
* கரூர் மாவட்டம், மணிமங்கலம் வட்டம், ஆத்தூர் கிராமத்தில் செயற்கையிழை ஆடைகள் குழுமத்திற்கான பொது வசதி மையம் ரூ.31.75 கோடி மதிப்பில் நிறுவப்படும்.
* தொழில் நிறுவனத்தினர் மற்றும் தகவல் தொழில்நுட்ப தொழில் முனைவோர்களின் தற்போதைய பணியிட வசதி தேவையினை பூர்த்தி செய்யும் வகையில் இணை பணியிட வசதி வளாகம் ரூ.23.33 கோடி திட்ட மதிப்பில் கிண்டி, அம்பத்தூர், மதுரை, ராணிப்பேட்டை 4 இடங்களில் நிறுவப்படும்.
* தொழில் முனைவோர்களின் தேவையினை கருத்தில் கொண்டு 18 சிட்கோ தொழிற்பேட்டைகளில் அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகளான சாலை, மழைநீர் வடிகால் மற்றும் தெருவிளக்கு போன்றவை ரூ.40 கோடி திட்ட மதிப்பில் நடப்பாண்டில் மேம்படுத்தப்படும்.
* காஞ்சிபுரம் மாவட்டம், திருமுடிவாக்கம் தொழிற்பேட்டையில் ரூ.37.25 கோடி திட்ட மதிப்பீட்டில் தொழிலாளர்கள் தங்கும் விடுதி நிறுவப்படும் என்பது உள்ளிட்ட 43 அறிவிப்புகளை வெளியிட்டார்.

The post இளைஞர்களிடையே தொழில் முனைவு சிந்தனையை ஊக்குவிக்க 2000 உயர்கல்வி நிறுவனங்களில் ‘நிமிர்ந்து நில்’ திட்டம்: 43 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் தா.மோ.அன்பரசன் appeared first on Dinakaran.

Related Stories: