நேற்று நடந்த இறுதிப் போட்டியில் அமெரிக்காவை சேர்ந்த உலகின் 3ம் நிலை வீராங்கனை ஜெஸிகா பெகுலா (31), சோபியா கெனின் (26) மோதினர். துவக்கம் முதல் அபாரமாக ஆடிய ஜெஸிகா முதல் செட்டை எளிதாகவும், இரண்டாவது செட்டை போராடியும் கைப்பற்றினார்.
இதனால், 6-3, 7-5 என்ற நேர் செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை அவர் கைப்பற்றினார். அவருக்கு ரூ.1.40 கோடி பரிசுத் தொகையும், வெற்றிக் கோப்பையும் வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பிடித்த கெனினுக்கு, ரூ. 85 லட்சம் பரிசுத் தொகையும், பதக்கமும் கிடைத்தது.
The post சார்லஸ்டோன் ஓபன் டென்னிஸ் ஜெஸிகா சாம்பியன்: ரூ.1.40 கோடி பரிசு appeared first on Dinakaran.