அரசு பள்ளியில் மாணவர்களின் கற்றல் வாசிப்பு திறன் வட்டார கல்வி அலுவலர் ஆய்வு

பெரணமல்லூர், ஏப். 4: பெரணமல்லூர் அருகே அரசு பள்ளியில் எண்ணும் எழுத்தும் திட்டத்தில் மாணவர்களின் கற்றல், வாசிப்பு திறன் செயல்பாடுகள் குறித்து வட்டார கல்வி அலுவலர் ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கான முழு ஆண்டு தேர்வு விரைவில் துவங்க உள்ளது. இந்நிலையில், பெரணமல்லூர் அடுத்த நெடுங்குணம் பகுதியில் செயல்படும் அரசு நிதி உதவி தொடக்கப்பள்ளியில் வட்டார கல்வி அலுவலர் குணசேகரன் நேற்று முன்தினம் ஆய்வு செய்து ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளின் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களில் வாசிப்பு திறன், எழுத்து வடிவங்களை கேட்ட போது சரியாக கூறினார்கள். குறிப்பாக எண்ணும் எழுத்தும் திட்டத்தில் எளிமையான முறையில் மாணவர்களுக்கு கல்வி கற்று கொடுப்பதால் கற்றல் திறன் அதிகரித்துள்ளதாக வட்டார கல்வி அலுவலர் அப்போது கூறினார். ஆய்வின்போது பள்ளி தலைமை ஆசிரியர் மோசஸ், உதவி ஆசிரியர் லாரன்ஸ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

The post அரசு பள்ளியில் மாணவர்களின் கற்றல் வாசிப்பு திறன் வட்டார கல்வி அலுவலர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: