வாகன சோதனையின்போது போலீசாரை தாக்கிய 2 வாலிபர்கள் கைது

 

துரைப்பாக்கம், ஏப்.4: துரைப்பாக்கம், கண்ணகி நகர் காவல் நிலையத்தில் காவலர்களாக பணியாற்றி வருபவர்கள் உமாபதி, அஸ்வின். இவர்கள், நேற்று இரவு கண்ணகி நகர் பேருந்து நிலையம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக 2 பேர் வந்த பைக்கை மடக்கியபோது, வாகனத்தை நிற்காமல் சென்றனர்.

உடனடியாக போலீசார், அவர்களை பின்தொடர்ந்து சென்று பிடித்தபோது, போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கி போலீஸ் சீருடையை கிழித்தனர். தொடர்ந்து, இருவரையும் மடக்கி பிடித்த போலீசார், அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து நடத்திய விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (26), சஞ்சய் (24) என்பது தெரியவந்தது. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

The post வாகன சோதனையின்போது போலீசாரை தாக்கிய 2 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Related Stories: