பாம்பு கடித்து மாணவி பலி

வடமதுரை, மார்ச் 30: சாணார்பட்டி அருகே வத்தல தோப்பம்பட்டியை சேர்ந்த விவசாயி மாரிமுத்து மகள் கோகுல பிரீத்தா (13). 8ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த மார்ச் 25ம் தேதி கோகுல பிரீத்தா வடமதுரை அருகே திருமலைக்கேணி பகுதியில் உள்ள தனது தந்தை குத்தகைக்கு எடுத்துள்ள தோட்டத்திற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை ஒரு விஷப்பாம்பு கடித்தது. இதனால் வலியால் அலறி துடித்த கோகுல ப்ரீத்தாவை அவரது பெற்றோர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் ஜிஹெச்சில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கோகுல பிரீத்தா நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். இதுகுறித்து வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பாம்பு கடித்து மாணவி பலி appeared first on Dinakaran.

Related Stories: