வெயிலில் சோர்வின்றி பணியாற்ற போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர், பழச்சாறு குளிர்பானம்: அரியலூர் எஸ்பி வழங்கினார்

அரியலூர், மார்ச் 30: அரியலூரில் போக்குவரத்து காவலர்கள் கோடைவெயிலில் சோர்வின்றி பணியாற்ற நீர் மோர், பழச்சாறு உள்ளிட்ட குளிர்பானங்களை மாவட்ட எஸ்பி தீபக் சிவாச் போக்குவரத்து காவலர்களுக்கு வழங்கினார். தமிழ்நாடு காவல்துறையில் போக்குவரத்து பிரிவு காவல்துறை உள்ளது. இப்பிரிவைச் சேர்ந்த காவலர்கள் முக்கியமாக சிக்னல் உள்பட முக்கிய பகுதிகளில் வாகனங்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக அரசு சார்பில் போக்குவரத்து காவலர்களுக்கு மழைக்காலங்களில் ரெயின்கோர்ட்டும், வெயில் காலங்களில் கூலிங் கிளாஸ் வழங்கப்படுகிறது. அதேபோல் பழச்சாறு வழங்கப்படுகிறது. கோடை காலம் துவங்கும் முன்னரே வெயில் வாட்டி வதக்கி வருகிறது. இந்நிலையில் கோடைவெயிலில் நின்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் போக்குவரத்து காவல் துறையினர் வெயிலின் தாக்கத்தில் இருந்து மீள்வதற்காகவும், சோர்வின்றி நல்லமுறையில் பணியாற்றுவதற்காகவும் குளிர்பானங்கள் வழங்கும் நிகழ்ச்சி அரியலூர் அண்ணா சிலை அருகே நேற்று நடைபெற்றது.அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் தீபக் சிவாச், போக்குவரத்து காவலர்கள் அனைவருக்கும் நீர்மோர், பழச்சாறு உள்ளிட்ட குளிர்பானங்களை வழங்கினார்.

மேலும் போக்குவரத்து காவலர்கள் பணியின்போது வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள தலைக்கவசம் மற்றும் கூலிங் கிளாஸ் ஆகியவற்றை வழங்கி நிகழ்ச்சியை தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் அரியலூர் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர்கார்த்திகேயன், போக்குவரத்து உதவி காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

The post வெயிலில் சோர்வின்றி பணியாற்ற போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர், பழச்சாறு குளிர்பானம்: அரியலூர் எஸ்பி வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: