ரயில்வே ஸ்டேஷன்களில் நாளை டிக்கெட் முன்பதிவு மையம் மதியம் வரையே இயங்கும்

சேலம், மார்ச் 30: ரம்ஜான் பண்டிகையையொட்டி நாளை (31ம் தேதி) அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால், ரயில்வே ஸ்டேஷன்களில் உள்ள ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள், ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்குவது போல் மதியம் வரை மட்டும் செயல்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன்படி, சேலம் ரயில்வே கோட்டத்தில் சேலம் ஜங்ஷன், சேலம் டவுன், ஈரோடு, திருப்பூர், கோவை, மேட்டுப்பாளையம், கரூர், ஆத்தூர் என கோட்டத்தில் உள்ள அனைத்து டிக்கெட் முன்பதிவு மையங்களும் (பிஆர்எஸ் மையம்) நாளை காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே இயங்கும். அதனால், டிக்கெட் முன்பதிவு செய்ய விரும்பும் பயணிகள், 2 மணிக்கு முன்பாக மையத்திற்கு சென்று, டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். இத்தகவலை சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

The post ரயில்வே ஸ்டேஷன்களில் நாளை டிக்கெட் முன்பதிவு மையம் மதியம் வரையே இயங்கும் appeared first on Dinakaran.

Related Stories: