ஆஸ்திரேலியாவில் மே 3ல் தேர்தல் பிரதமர் அல்பானீஸ் அறிவிப்பு

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் அந்தோனி அல்பானீஸ் தலைமையிலான தொழிலாளர் கட்சி ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 2022ல் நடந்த தேர்தலில் தொழிலாளர் கட்சி மெஜாரிட்டி இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அதிகரிக்கும் பொருளாதார செலவு, குடியிருப்புகள் உள்ளிட்ட பிரச்னைகளில் தோல்வி அடைந்து விட்டதாக ஆளும் கட்சி மீது எதிர்கட்சியான சுதந்திர தேசிய கூட்டணி குற்றம் சாட்டி வருகிறது. தற்போதைய நிலவரப்படி தொழிலாளர் கட்சியின் செல்வாக்கு சரிவடைந்துவிட்டது. எதிர்க்கட்சியான சுதந்திர-தேசிய கூட்டணிக்கு ஆதரவு பெருகி வருகிறது.

The post ஆஸ்திரேலியாவில் மே 3ல் தேர்தல் பிரதமர் அல்பானீஸ் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: