தெருநாய் கடி பாதிப்பு: கட்டுப்படுத்த கார்த்தி சிதம்பரம் கோரிக்கை

டெல்லி: இந்தியாவில் தெரு நாய்களால் மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்த கார்த்தி சிதம்பரம் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் பிரதமர் மோடியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். உலகில் ஏற்படும் ரேபிஸ் வெறிநாய் கடி இறப்புகளில் 36% இந்தியாவில் நிகழ்கின்றன. தெருநாய் கடி சவாலை எதிர்கொள்ள ஒரு நீண்ட கால திட்டம் வகுக்க வேண்டும் என்று கார்த்தி சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார். மேலும், விலங்கு பிறப்பு கட்டுப்பாட்டு விதிகள், 2023ல் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் அது பயனற்றதாக உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

 

The post தெருநாய் கடி பாதிப்பு: கட்டுப்படுத்த கார்த்தி சிதம்பரம் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: