சங்கரன்கோவில் பள்ளியில் மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

 

சங்கரன்கோவில், மார்ச் 28. சங்கரன்கோவில் 36 கிராம சேனைத்தலைவர் துவக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் பள்ளி செயலாளர் நல்லமுத்துசாமி தலைமை வகித்தார். ஆடித்தபசு திருவிழா 7ம் திருநாள் மண்டகப்படி செயலாளர் தங்கராஜ் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியை அங்கையர்கண்ணி வரவேற்றார். டாக்டர் வாசுகி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். முதலாம் வகுப்பு மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது. ஆசிரியர் முனீஸ்வரன் நன்றி கூறினார். விழாவில் பெற்றோர் மற்றும் மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

The post சங்கரன்கோவில் பள்ளியில் மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா appeared first on Dinakaran.

Related Stories: