மாஜி பாஜ எம்பி வீட்டின் அருகே குண்டு வீச்சு; துப்பாக்கி சூடு: மேற்கு வங்கத்தில் பரபரப்பு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. எதிர்க்கட்சியாக பாஜ உள்ளது. அங்கு, திரிணாமூல் காங்கிரசுக்கும், பாஜவுக்கும் பல்வேறு விவகாரங்களில் மோதல் போக்கு நிலவி வருகிறது. இத்தகைய சூழலில், மாநில பாஜ மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் எம்.பி.யுமான அர்ஜூன் சிங் வீட்டின் அருகே மர்ம நபர்கள் குண்டுகளை வீசியும் துப்பாக்கி சூடும் நடத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை பார்த்ததும் அர்ஜூன் சிங்கும் அவரது ஆதரவாளர்களும் விரைந்தனர். தாக்குதல் நடத்தியவர்களை விரட்டி பிடிக்க முயன்றனர். அதற்குள் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவத்தில் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து காவல்துறை ஆணையர் அஜய் தாகூர் கூறுகையில், ‘தற்போது நிலைமை கட்டுக்குள் இருக்கிறது. தாக்குதல் நடத்தியவர்கள் தப்ப முடியாது, சட்டத்தின்படி அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். சம்பவம் நடந்த இடத்தின் அருகே ஒரு மில் இருப்பதாகவும் அங்குள்ள தொழிலாளர்கள் இரு குழுக்களாக மோதி கொண்டதையடுத்து இந்த துப்பாக்கி சூடு நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

The post மாஜி பாஜ எம்பி வீட்டின் அருகே குண்டு வீச்சு; துப்பாக்கி சூடு: மேற்கு வங்கத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: