சென்னை: கிராம நத்தம் நிலங்களுக்கு பட்டா வழங்க கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு இந்த விஷயத்தில் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் அடிப்படையில், கிராம நத்தம் நிலங்களில் நீண்டகாலமாக குடியிருந்தால், அந்த நிலத்தை அரசு நிலமாகவோ, ஆக்கிரமிப்பாகவோ கருத முடியாது என்றும், அந்த நிலங்களை மறு வகைப்படுத்த முடியாது.
அதேசமயம், கிராம நத்தம் நிலத்தில் யாரும் குடியிருக்காவிட்டால், அந்த நிலம் அரசுக்கு சொந்தமானதாகும். அந்த நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அரசு அகற்றலாம். இதுசம்பந்தமாக 4 வாரங்களில் நில நிர்வாக ஆணையர் சுற்றறிக்கை வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டார்.
The post கிராம நத்தம் நிலத்தில் நீண்டகாலம் குடியிருந்தால் ஆக்கிரமிப்பு நிலமாக அந்த நிலத்தை கருத முடியாது: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.