முத்துப்பேட்டை அருகே கஞ்சா விற்றவர் கைது

 

முத்துப்பேட்டை, மார்ச் 25: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக முத்துப்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கழனியப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

விசாரணையில், உதயமார்த்தாண்டம் கிராமத்தை சேர்ந்த சின்னப்பா என்பவரது மகன் கோபாலகிருஷ்ணன் (36) கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. போலீசார் கோபாலகிருஷ்ணனை கைது செய்து விற்பனைக்கு வைத்திருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து கோபால கிருஷ்ணனை கைது செய்தனர்.

 

The post முத்துப்பேட்டை அருகே கஞ்சா விற்றவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: