போதகருக்கு எதிரான இந்த குற்றச்சாட்டு பற்றி விசாரிக்க 3 உறுப்பினர்கள் அடங்கிய குழுவை காவல் துறை அமைத்துள்ளது.மேலும் பஞ்சாப் மாநில மகளிர் ஆணையம் புகார் அளித்த பெண்ணுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில்,கடந்த 14ம்தேதி பஜிந்தர்சிங், ஒரு பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பின்னர் அவரது கன்னத்தில் அறைகிறார்.அதே போல் ஒரு ஆணையும் அவர் தாக்குகிறார். இந்த வீடியோ சமூகவலைதளங்கில் வைரலாகியது. இந்த வீடியோ குறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், வீடியோவில் வெளியான காட்சிகள் தொடர்பாக இதுவரை புகார் எதுவும் வரவில்லை. வீடியோவின் உண்மைத்தன்மை மற்றும் சம்பவம் நடந்த நேரம் ஆகியவை பற்றி விசாரணை நடந்து வருகிறது என்றனர்.
The post பெண்ணை கன்னத்தில் அறைந்த கிறிஸ்தவ மத போதகர்: வீடியோ வைரலானதால் பஞ்சாப் காவல்துறை விசாரணை appeared first on Dinakaran.