10 அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ உண்ணாவிரதம்

ராமநாதபுரம், மார்ச் 24: ஜாக்டோ-ஜியோ சார்பில் 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, ராமநாதபுரத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உண்ணாவிரதம் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது, சரண் விடுப்பு சலுகை, ஊதிய முரண்பாடுகளை களைவது, காலியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் முன்பாக உண்ணா விரதப் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட தலைவர் முருகேசன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் சிவபாலன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் விஜயராமலிங்கம் ஆகியோர் தலைமை வகித்தனர். முன்னாள் படைவீரர் நலத்துறை நிர்வாக ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் இளங்கோவன் சிறப்புரையாற்றினார்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

The post 10 அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ உண்ணாவிரதம் appeared first on Dinakaran.

Related Stories: