திருவிழந்தூரில் கஞ்சா விற்பனை செய்த 2 வாலிபர்கள் கைது

 

மயிலாடுதுறை, மார்ச் 23: மயிலாடுதுறை திருவிழந்தூர் தீப்பாய்ந்தாள் அம்மன் கோவில் அருகே கஞ்சா போதை பொருள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலையடுத்து மயிலாடுதுறை இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது போலீசாரை கண்டு அங்கிருந்து தப்பியோட முயன்ற 2 வாலிபர்களை போலீசார் சுற்றி வளைத்துப் பிடித்தனர். பின்னர் பிடிபட்டவர்களை போலீசார் சோதனையிட்டபோது அவர்களிடம் 1.100 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள் மயிலாடுதுறை திருவிழந்தூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த வீரமணி(வயது 27), குத்தாலம் அருகே மாதிரிமங்கலம் சிவராமபுரம் அபிஷேக்(20) என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த மயிலாடுதுறை போலீசார் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

The post திருவிழந்தூரில் கஞ்சா விற்பனை செய்த 2 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Related Stories: