மாநகராட்சி பகுதிகளில் மேல்நிலை கம்பிகள் புதைவட கம்பிகளாக மாற்றம் : அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னை :”வானூர் தொகுதியில் பேரிடர்களின் போது புயலால் மின் கம்பங்கள் சாய்ந்து பாதிப்படைவதால் மேல்நிலை கம்பி புதைவட கம்பிகளாக மாற்றப்படுமா?” என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் வானூர் சக்ரபாணி கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “மாநகராட்சி பகுதிகளில் மேல்நிலை கம்பிகள் புதைவட கம்பிகளாக மாற்றும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. படிப்படியாக நகராட்சி பேரூராட்சி தேவைப்படும் இடங்களில் புதைவட கம்பிகள் பதிக்கப்படும். வானுர் தொகுதிகளிலும் தேவைப்படும் பட்சத்தில் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்” இவ்வாறு தெரிவித்தார்.

The post மாநகராட்சி பகுதிகளில் மேல்நிலை கம்பிகள் புதைவட கம்பிகளாக மாற்றம் : அமைச்சர் செந்தில் பாலாஜி appeared first on Dinakaran.

Related Stories: