இதில் ஆர்யன் மேதர் (15), ஓம் சிங் தோமர் (15), சித்தார்த் சிங் (16), மற்றும் ஆர்யன் சிங் (16) ஆகிய 4 பேரும் பரிதாபமாக நீரில் மூழ்கினர். இதனைப் பார்த்த மற்ற சிறுவர்கள் உடனடியாக உள்ளூர்வாசிகள், காவல்துறை மற்றும் அவர்களது பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் மீட்புக் குழுவினர் நீரில் மூழ்கியவர்களை மீட்டு நால்வரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக பத்லாப்பூர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
The post சோகத்தில் முடிந்த ஹோலி கொண்டாட்டம்.. மகாராஷ்டிராவில் 4 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!! appeared first on Dinakaran.
