முதல்வர் மருந்தகங்களில் மருந்துகள் 75 சதவீதம் விலை குறைவு

 

மயிலாடுதுறை, மார்ச் 15: முதல்வர் மருந்தகங்களில் மருந்து 75 சதவீதம் விலை குறைந்த விலையில் விற்கப்படுகிறது. எனவே முதல்வலர் மருந்தகங்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கலெக்டர் ஸ்ரீகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் ஸ்ரீகாந்த் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு முதலமைச்சர் 15.8.2024 தேதிய சுதந்திர தின உரையில் தமிழ்நாடு மாநிலம் முழுவதும் 1000 முதல்வர் மருந்தகம் திறக்கப்படும் என அறிவித்தார்.

அந்த அறிவிப்பினைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் 24.2.2025 தேதியில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 19 முதல்வர் மருந்தகங்கள் உட்பட தமிழ்நாடு மாநிலம் முழுவதும் 1000 முதல்வர் மருந்தகங்களை திறந்து வைத்தார். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள முதல்வர் மருந்தகங்கள் மூலம் ஜெனரிக் மருந்துகள், சித்தா, யுனானி மற்றும் இந்திய மருந்துகள், சர்ஜிக்கல், நியூட்ராசூட்டிக்கல்ஸ். மற்றும் பிற மருந்துகள் 75 சதவீதம் வரை சந்தைவிலையை விட குறைந்த விலையில் நிறைந்த தரத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் அனைவரும் தங்கள் பகுதிகளில் உள்ள முதல்வர் மருந்தகங்களில் மருந்துகளை பெற்று பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post முதல்வர் மருந்தகங்களில் மருந்துகள் 75 சதவீதம் விலை குறைவு appeared first on Dinakaran.

Related Stories: