சென்னை: சேலத்தில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பதிவிட்டதால் ஆசிரியர் கைது என்பது வதந்தி என்று தகவல் சரிபார்ப்பகம் விளக்கமளித்துள்ளது. கண்ணங்குறிச்சியைச் சேர்ந்த டுடோரியல் கல்லூரி ஆசிரியர் கைது செய்யப்பட்டது தொடர்பாக வதந்தி பரவி வருகிறது. வலைதளத்தில் சிறுபான்மை மக்களுக்கு எதிராகவும், பெண்கள் குறித்து இழிவாகவும் பதிவிட்டதால் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சேலத்தில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாகப் பதிவிட்ட டுடோரியல் கல்லூரி ஆசிரியர் கைது செய்யப்பட்டதாக’ செய்தி காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது. இது திரிக்கப்பட்ட செய்தி.
கலியுக கண்ணன் எனும் எக்ஸ் தள கணக்கில் இயங்கிவரும் சேலம் மாவட்டம் கண்ணங்குறிச்சியைச் சேர்ந்த இந்நபர் தொடர்ந்து சிறுபான்மையின மக்களுக்கு எதிராக வெறுப்புப் பதிவுகளைப் பதிவிட்டதாலும், பெண்களுக்கு எதிராக இழிவானப் பதிவுகளைப் பதிவிட்டதாலே வழக்குப் பதிவாகி கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால், மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாகப் பதிவிட்டதால் கைது செய்யப்பட்டதாகப் பொய்யான செய்திகள் பரப்பப்படுகிறது.
The post சேலத்தில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பதிவிட்டதால் ஆசிரியர் கைது என்பது வதந்தி: தகவல் சரிபார்ப்பகம் appeared first on Dinakaran.