சிவகங்கையில் கேஸ் ஏஜென்சி அலுவலகம் முன் மக்கள் போராட்டம்

 

சிவகங்கை: சிவகங்கையில் கேஸ் ஏஜென்சி அலுவலகம் முன்பு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காலி சிலிண்டர்களை சாலையில் வைத்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டுள்ளனர். சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு செய்து 20 நாட்களுக்கு மேலாகியும் விநியோகிக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர். பொதுமக்கள் சாலை மறியல் காரணமாக சிவகங்கை – மேலூர் சாலையில் வாகனங்கள் நீண்டவரிசையில் நிற்கின்றன.

Related Stories: