பிரபல நட்சத்திர ஓட்டலில் லிப்ட் அறுந்து பராமரிப்பு ஊழியர் பலி

 

மதுரவாயல், மார்ச் 13: சென்னை தேனாம்பேட்டை அண்ணாசாலையில் பிரபல நட்சத்திர ஓட்டல் இயங்கி வருகிறது. இந்த ஓட்டலில் பணியாற்றும் ஊழியர்கள் மட்டும் செல்லும வகையில் கட்டிடத்தின் பின்புறம் லிப்ட் உள்ளது. இந்த லிப்ட் சில நாட்களாக பழுதாகி இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஓட்டல் நிர்வாகிகள் லிப்ட் பராமாரிக்கும் நிறுவனத்திற்கு தகவல் அளித்தனர். அதன்படி நேற்று மதியம் லிப்டை பழுதுபார்க்கும் பணியில் தனியார் பராமரிப்பு ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது திடீரென லிப்ட் அறுந்து கீழே இறங்கியது. அப்போது கீழே பணியில் இருந்த பராமரிப்பு நிறுவன ஊழியர் ஷியம் சுந்தர்(34) லிப்ட்க்கு அடியில் சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அளிந்த தேனாம்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த பராமரிப்பு நிறுவன ஊழியரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவம் குறித்து தேனாம்பேட்டை போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பிரபல நட்சத்திர ஓட்டலில் லிப்ட் அறுந்து பராமரிப்பு ஊழியர் பலி appeared first on Dinakaran.

Related Stories: