எனவே, ஆபத்தான நிலையில் காணப்படும் பழையகுடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்றிவிட்டு, புதிதாக குடிநீர் தொட்டி கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், சேதமடைந்த அந்த குடிநீர் தொட்டியை அகற்ற வேண்டும் என பெரியபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம், பலமுறை மனு கொடுத்துள்ளோம். மேலும், கிராம சபை கூட்டத்திலும் இதுகுறித்து தெரிவித்து, குடிநீர் தொட்டியை அகற்றிவிட்டு புதியதாக குடிநீர் தொட்டி கட்ட வேண்டும் என பலமுறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, ஆபத்தான நிலையில் உள்ள குடிநீர் தொட்டியை அகற்ற வேண்டும் என்றனர்.
The post பெரியபாளையம் அருகே ஆபத்தான நிலையில் குடிநீர் தொட்டி: அகற்றி புதிதாக கட்ட கோரிக்கை appeared first on Dinakaran.