செங்குன்றம் அருகே பிளாஸ்டிக் குப்பை கழிவுகளில் தீ விபத்து

புழல்: செங்குன்றம் அருகே கொட்டப்பட்டுள்ள பிளாஸ்டிக் குப்பை கழிவுகளில் ஏற்பட்ட தீ விபத்தால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. செங்குன்றம் அடுத்த புள்ளிலைன் ஊராட்சிக்கு உட்பட்ட அருண் உல்லாச நகர், தனியார் மோட்டார் ஷோரூம் அருகே காலி மனையில் பிளாஸ்டிக் குப்பைக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று காலை பிளாஸ்டிக் குப்பை கழிவுகள் திடீரென தீப்பற்றி எரிந்து, தீ மளமளவென பரவி கரும்புகை சூழ்ந்துள்ளது. அதிர்ச்சியடைந்த, அப்பகுதி மக்கள் இதுகுறித்து செங்குன்றம் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர்.

தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், கொழுந்துவிட்டு எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரம் போராடி தீயை முற்றிலுமாக அணைத்தனர். இதில் அதிர்ஷ்டவசமாக அருகில் உள்ள தனியார் மோட்டார் ஷோரூம் மற்றும் தனியார் மெக்கானிக் ஷெட்டுகள் மீது தீ பரவாமல் தடுத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. செங்குன்றம் போலீசார், தீவிபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

The post செங்குன்றம் அருகே பிளாஸ்டிக் குப்பை கழிவுகளில் தீ விபத்து appeared first on Dinakaran.

Related Stories: