அரியலூர் சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

 

அரியலூர், மார்ச் 12: அரியலூர் சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு நேற்று நடைபெற்றது. பிரதோஷத்தையொ ட்டி அரியலூர் அடுத்த திருமழபாடி வைத்தியநாத சுவாமி திருக்கோயிலில், நந்தியெம்பெருமானுக்கு திரவியபொடி மாவுப்பொடி,மஞ்சள் சந்தனம், பால்,தேன், உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து வைத்திநாத சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதே போல் அரியலூர் ஆலந்துரையார், கைலாசநாதர், விசுவநாதர், விளாங்குடி கைலாசநாதர், குறிஞ்சான் குளக்கரை சாசி விசுவநாதர் , தேளூர் சொக்கநாதர், கீழப்பழூர் ஆலந்துறையார், திருமானூர் கைலாசநாதர் , செந்துறை சிவதாண்டேஸ்வரர் உள்ளிட்ட சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

The post அரியலூர் சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு appeared first on Dinakaran.

Related Stories: