சேத்துப்பட்டு, மார்ச் 8: சேத்துப்பட்டு அடுத்த பெரணம்பாக்கத்தைச் சேர்ந்தவர் சேட்டு மகன் பாண்டியன்(34). இவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு பெரிய ஆத்துரையை சேர்ந்த செல்வி என்பவரை திருமணம் செய்து அதே ஊரில் வசித்து வந்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.பாண்டியன் தேவிகாபுரத்தை சேர்ந்த சக்திவேல் என்பவரது கடையில் கூலி வேலை செய்து வந்துள்ளார். அப்போது பாண்டியன் செல்வி ஆகிய இருவரும் சக்திவேலுடன் நட்பாக பழகிவந்தனர். இதனால் சக்திவேல் பாண்டியன் வீட்டிற்கு அடிக்கடி சக்திவேல் வந்து சென்றுள்ளார். இந்நிலையில் பாண்டியன் மனைவிக்கும் சக்திவேலுக்கும் தகாத உறவு ஏற்பட்டு அடிக்கடி செல்போனில் பேசி பழகி வந்துள்ளார். இதையறிந்த பாண்டியன் அவரது மனைவி செல்வியை கண்டித்துள்ளார்.
இதன் காரணமாக சக்திவேல் ஓராண்டிற்கு முன்பு பாண்டியனை அடித்தாக கூறப்படுகிறது. இதனால் பாண்டியன் மன உளைச்சல் ஏற்பட்டு மனைவியுடன் வாழாமல் சென்னைக்கு சென்று அங்கேயே தங்கி கூலி வேலை செய்து வரும் வருமானத்தில் அவரது குழந்தைகள் படிப்பிற்கு பணம் கொத்து வநதுள்ளார். இந்நிலையில் கடந்த 3ம் தேதி குழந்தைகளை பார்க்க பாண்டியன் பெரிய ஆத்துரை கிராமத்திற்கு சென்ற போது மனைவி செல்வி குழந்தைகளுடன் தேவிகாபுரம் சென்றுள்ளார் என தெரிந்து அங்கு சென்று பஸ் ஸ்டாண்டில் குழந்தைகளை பார்த்துள்ளார்.
அப்போது மனைவி இன்னும் சக்திவேலுடன் உறவில் இருந்ததை அறிந்த பாண்டியன் மனைவியை கண்டித்துள்ளார். பின்னர், குழந்தைகளை அழைத்து கொண்டு சொந்த ஊரான பெரணம்பாக்கத்திற்கு செல்ல புறப்பட்டார். அப்போது தேவிகாபுரம் ஆதிதிராவிடர் விடுதி அருகே சென்ற போத சக்திவேல் பாண்டியனை வழி மறித்து அவரது ஜாதி குறித்து ஆபாசமாகவும், அவதூராகவும் பேசி பாண்டியனை தாக்கியுள்ளா். இதுகுறித்து பாண்டியன் கொடுத்த புகாரின் பேரில் போளூர் டிஎஸ்பி மனோகரன்,சேத்துப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் நாராயணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
The post கணவனை தாக்கிய கள்ளக்காதலன் மீது போலீசார் வழக்கு மனைவியை கண்டித்ததற்கு appeared first on Dinakaran.