புகாரை விசாரிக்க உல்லாசத்துக்கு அழைத்த சப்-இன்ஸ்பெக்டர் கைது: நைசாக பேசி போலீசில் சிக்க வைத்த இளம்பெண்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோட்டயம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் 35 வயதான இளம்பெண். இவர் கடந்த சில தினங்களுக்கு முன் பண மோசடி தொடர்பாக புகார் கொடுப்பதற்காக காந்திநகர் காவல் நிலையத்திற்கு சென்றார். இந்த புகார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

காந்திநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் தன்னுடைய புகாரில் கூடுதல் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி கடந்த சில தினங்களுக்கு முன் அந்த இளம்பெண் மீண்டும் காவல் நிலையத்திற்கு சென்றார். அப்போது பிஜு என்ற சப்-இன்ஸ்பெக்டர் காவல் நிலையத்தில் இருந்தார். வழக்கில் தொடர் விசாரணை நடத்த வேண்டுமா? அப்போ எனக்கு ஒரு மதுபாட்டில் வாங்கிட்டு வா! என இளம்பெண்ணிடம் சப்-இன்ஸ்பெக்டர் பிஜு கூறியுள்ளார்.

இதைக்கேட்டு முதலில் அதிர்ச்சியடைந்த இளம்பெண் பின்னர் மதுபான கடைக்கு சென்று மதுபாட்டில் வாங்கினார். அதனை பெற்றுக்கொண்ட சப்-இன்ஸ்பெக்டர் பிஜு, நைசாக இளம்பெண்ணிடம் பேச்சு கொடுத்து தன்னுடன் தனிமையில் இருக்க வேண்டும் என்று வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து இளம்பெண் கோட்டயம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் தெரிவித்தார். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், சப்-இன்ஸ்பெக்டர் பிஜுவை கையும் களவுமாக பிடிக்க திட்டமிட்டனர். இதனால் நேற்று இளம்பெண்ணை, சப்-இன்ஸ்பெக்டர் பிஜுவிடம் ஆசையாக பேச வைத்து அங்குள்ள ஒரு ஓட்டலுக்கு வரவழைத்தனர். ஓட்டலுக்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் பிஜுவை ஏற்கனவே அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

The post புகாரை விசாரிக்க உல்லாசத்துக்கு அழைத்த சப்-இன்ஸ்பெக்டர் கைது: நைசாக பேசி போலீசில் சிக்க வைத்த இளம்பெண் appeared first on Dinakaran.

Related Stories: