இதில் திண்டுக்கல், திருச்சி, மதுரை, புதுக்கோட்டை மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட 700 காளைகள் வாடிவாசல் வழியாக சீறி பாய்ந்தன. 400 மாடுபிடி வீரர்கள் களம் கண்டனர். வாடிவாசலில் இருந்து பாய்ந்து வெளியேறிய காளைகளை, மாடுபிடி வீரர்கள் தீரத்துடன் அடக்கினர். போட்டியில் மாடுபிடி வீரர்களிடம் பிடிபடாத காளைகளுக்கும், காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும் தங்கம், வெள்ளிக்காசுகள், கட்டில், பீரோ, வேட்டி, துண்டுகள் உள்ளிட்ட பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன.
The post திண்டுக்கல் அருகே ஜல்லிக்கட்டு: 700 காளைகள், 400 வீரர்கள் மல்லுக்கட்டு appeared first on Dinakaran.
