சென்னை: மார்ச் 5ம் தேதி நடைபெற உள்ள அனைத்துக்கட்சிக் கூட்டத்துக்கு 45 கட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது. ஒன்றிய அரசு மக்களவை தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்வதை முன்னிட்டு அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. திமுக, அதிமுக, விசிக, தவெக, காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், மதிமுக, பாமக, மநீம, நாதக உள்ளிட்ட 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.