இதனால், ஆன்மீக சுற்றுலா பயணிகள் முதல் பல்வேறு தரப்பினர் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தாங்கள் செங்கல்பட்டு சப்-கலெக்டராக இருந்த அப்போதைய கால கட்டத்தில் ஆக்கிரமிப்பை அகற்றி, சாலையை விரிவாக்கம் செய்ய உரிய பணிகளை மேற்கொண்டபோது, ஆக்கிரமிப்பு கடைக்காரர்கள் தரப்பில் ஆக்கிரமிப்பை அகற்ற தடை விதிக்கக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், நீதிமன்றம் அம்மனுவை தள்ளுபடி செய்தது.
ஆனாலும் இத்தனை ஆண்டுகளாகியும் இதுவரையில் பொதுமக்களின் நலன் கருதி அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே, தாங்கள் இந்த விஷயத்தில் தனி கவனம் செலுத்தி கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளாகி உள்ள திருக்கழுக்குன்றம் பஜார் வீதியில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி, சாலையை அகலப்படுத்தி ஆன்மீக பயணிகள் மற்றும் பொதுமக்களின் சிரமத்தை போக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post திருக்கழுக்குன்றம் பஜார் வீதியில் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்: வருவாய்த்துறை செயலாளருக்கு கோரிக்கை மனு appeared first on Dinakaran.
