ஒரு கட்டத்தில் நகைகளை உருக்கும்போது சேதாரம் அதிகமாகி விட்டது. இதனால் எனக்கு நஷ்டமாகிவிட்டது. கொஞ்சம் பொறுமையாக இருங்கள். எப்படியாவது உங்களது நகைகளை கொடுத்து விடுகிறேன், எனக் கூறி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 3 வருடத்திற்கு முன், நகைக்கடை வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறி அவர் கடையை மூடி விட்டார். இருந்தபோதும் தொடர்ந்து வரலட்சுமி, சரவணகுமாரிடம் நகைகளை கேட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 13ம் தேதி சரவணகுமார் மீது திருவிக நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் கிருபாநிதி தலைமையிலான போலீசார், சரவணகுமாரை அழைத்து விசாரணை நடத்தியபோது, எப்படியாவது கடன் வாங்கி நகைகளை கொடுத்து விடுகிறேன், எனக்கூறி வந்துள்ளார். ஆனால் பேசியபடி அவர் நகைகளை தராததால் நேற்று அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
The post பழைய நகைகளை புதிதாக மாற்றித்தருவதாக ரூ.45 சவரன், ரூ.8 லட்சம் ஏமாற்றிய நகைக்கடை உரிமையாளர் கைது appeared first on Dinakaran.
