கேளம்பாக்கம் அருகே வடமாநில வாலிபர்களை தாக்கி செல்போன் பறிப்பு: 2 மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

 

திருப்போரூர், பிப்.18: கேளம்பாக்கம் அருகே தையூரில் சிவகுமார் என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. இந்த, வீட்டின் ஒரு பகுதியில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த கட்டுமான தொழிலாளர்கள் வாடகைக்கு தங்கி உள்ளனர். இதில், ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களான பிரமோத்குமார் (19), ரூக் சந்திர ராம் (25), ஜோகிந்தர் ராம் (25) ஆகியோர் காலவாக்கத்தில் நடைபெறும் கல்லூரி கட்டுமானப்பணி முடிந்து, நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் தங்களது இருப்பிடத்திற்கு திரும்பி சென்றுக்கொண்டிருந்தனர்.

அப்போது, தையூர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே பைக்கில் வந்த 2 மர்ம நபர்கன், வடமாநில தொழிலாளர்கள் 3 பேரையும் சரமாரியாக தாக்கிவிட்டு, அவர்களிடமிருந்து 3 செல்போன்களை பறித்துச்சென்றனர். இந்த, தாக்குதலில் பிரமோத்குமாருக்கு தலை, முகம், கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. அதிர்ச்சியடைந்த இவர்கள், இதுகுறித்து தங்களின் வீட்டு உரிமையாளரான சிவகுமாரிடம் தெரிவித்தனர். அவர், 3 பேரையும் மருத்துவமனையில் அனுமதித்து, கேளம்பாக்கம் போலீசாரிடம் தகவல் தெரிவித்தார். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த கேளம்பாக்கம் போலீசார், வடமாநில தொழிலாளர்களை தாக்கி செல்போன் பறித்துச்சென்ற தையூர் பகுதியை சேர்ந்த 2 மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

The post கேளம்பாக்கம் அருகே வடமாநில வாலிபர்களை தாக்கி செல்போன் பறிப்பு: 2 மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை appeared first on Dinakaran.

Related Stories: