ஆம்னி பஸ் ஏஜெண்ட் வெட்டி படுகொலை: போலீஸ் தீவிர விசாரணை

 

மதுரை, பிப்.11: மதுரை திடீர் நகரை சேர்ந்தவர் ராமசுப்ரமணியன்(35). இவர் மாட்டுத்தாவணியில் இயங்கி வரும் ஆம்னி பஸ் ஸ்டாண்டில் ஆம்னி பஸ்களுக்கு முன்பதிவு செய்து டிக்கெட் போடும் ஏஜெண்டாக வேலை செய்து வந்தார். நேற்று அதிகாலை 12.30 மணியளவில் வேலை முடிந்து மாட்டுத்தாவணியில் இருந்து திடீர் நகரில் உள்ள அவரது வீட்டிற்கு டூவீலரில் சென்றார்.

அப்போது அங்கு மறைந்து இருந்த மர்ம நபர்கள் சுற்றி வளைத்து வெட்டி படுகொலை செய்தனர். பின்னர் அங்கிருந்து டூவீலர்களில் தப்பிச்சென்றனர். அதிகாலை என்பதால் ஆள் நடமாட்டம் இல்லை. இதனால் உடனடியாக போலீசாருக்கு கொலை சம்பவம் குறித்து தகவல் தெரியவில்லை. தகவல் அறிந்து வந்த திடீர்நகர் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராமசுப்ரமணியனை கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post ஆம்னி பஸ் ஏஜெண்ட் வெட்டி படுகொலை: போலீஸ் தீவிர விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: