ஈத்தாமொழி, பிப்.8: ஈத்தாமொழி அருகே இலந்தையடிதட்டு பகுதியை சேர்ந்தவர் ராஜலிங்கம். இவரது மகன் அரவிந்த்(30). பெயின்டர். சம்பவத்தன்று அரவிந்த் பைக்கில் பெரியவிளை ஜங்ஷன் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது கன்னியாகுமரி சுனாமி காலனியை சேர்ந்த பிரான்சிஸ் மகன் பாலிடெக்னிக் மாணவரான சாரோன் (18) என்பவரும் பைக்கில் வந்து கொண்டிருந்தார். தேரிமேல்விளையில் இருந்து ஈத்தாமொழி செல்லும் சாலையில் சாரோனின் பைக் திரும்பியபோது 2 பைக்குகளும் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஈத்தாமொழியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து அரவிந்த் ஈத்தாமொழி போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post ஈத்தாமொழி அருகே பைக்குகள் மோதல் :2 பேர் படுகாயம் appeared first on Dinakaran.
