மானூர் அருகே மயங்கி விழுந்து தொழிலாளி சாவு

மானூர், பிப்.6: மானூர் அருகேயுள்ள வெண்கலப்பொட்டல் கிராமத்தைச் சேர்ந்தவர் திருவாளி மகன் முத்துக்குமார்(37). இவர் கோயம்புத்தூரிலுள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். உடல்நிலை சரியில்லாததால் வெண்கலப்பொட்டல் வந்த முத்துக்குமார் நேற்று முன்தினம் தனியாக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மருத்துவமனை வளாகத்தில் திடீரென மயங்கி விழுந்த அவர் சம்பவ இடத்தில் பலியானார். இது குறித்த புகாரின் பேரில் மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post மானூர் அருகே மயங்கி விழுந்து தொழிலாளி சாவு appeared first on Dinakaran.

Related Stories: