இலவச வேட்டி,சேலை வழங்கல்

 

ராமேஸ்வரம்,பிப்.5: அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் நிர்வாகம் சார்பாக திருக்கல்யாணம் மண்டபத்தில் பக்தர்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கி பொது விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு ராமநாதசுவாமி திருக்கோயில் இணை ஆணையர் சிவராம்குமார் தலைமை வகித்தார். இதில் அரசியல் பிரமுகர்கள், கோயில் ஊழியர்கள், சமுக ஆர்வலர்கள், பக்தர்ளும் பொது விருந்தில் கலந்து கொண்டனர். கோயில் நிர்வாகம் சார்பாக பக்தர்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டது.

The post இலவச வேட்டி,சேலை வழங்கல் appeared first on Dinakaran.

Related Stories: