தகவல் அறிந்த ராணிப்பேட்டை எஸ்.பி. விவேகானந்த சுக்லா சிப்காட் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று ஆய்வு செய்தார். மேலும் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க 7 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து ராணிப்பேட்டை சிப்கார் பகுதியை சேர்ந்த ஹரி என்பவர் சென்னை பல்லாவரம் பகுதியில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து ஹரியை கைது செய்த போலீசார் ராணிப்பேட்டை அழைத்து சென்றபோது காவேரிபாக்கம் அருகே காவலர்களை தாக்கிவிட்டு தப்ப முயன்றுள்ளார்.
அப்போது அருகில் இருந்த ஆய்வாளர் சசிகுமார் தற்காப்புக்காக ஹரியை காலுக்கு கீழே சுட்டு பிடித்துள்ளனர். மேலும் உயிருக்கு ஆபத்து ஏதும் இல்லாத நிலையில், முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஹரி ஆகியோர் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனை அடுத்து வழக்கு தொடர்பாக பல்வேறு நபர்களை தொடர்ந்து விசாரித்து வந்த நிலையில், சிப்கார் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த பரத், விஷால் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
The post ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் காவல் நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மேலும் 2 பேர் கைது appeared first on Dinakaran.
