மனைவி பிரிவால் கணவர் தற்கொலை

மானூர்,பிப்.4: மானூர் அருகேயுள்ள கரம்பை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் முத்துகோபி (32). இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அரியகுளத்தைச் சேர்ந்த தங்கமணி (30) என்பவருக்கு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ராகினி (10) என்ற பெண் குழந்தை உள்ளது. இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மனைவி தங்கமணி பிரிந்து குழந்தையுடன் அரியகுளத்தில் வசித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பாக முத்துகோபி தனது குழந்தையை பார்ப்பதற்காக அரிய குளம் சென்றார். ஆனால் குழந்தையை பார்க்கமுடியாமல் திரும்பி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் தீராத மனஉளைச்சலில் இருந்துவந்த முத்துகோபி நேற்று தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து விரைந்துசென்ற மானூர் போலீசார் முத்துகோபியின் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மனைவி பிரிவால் கணவர் தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: