அனுமதியின்றி மண் அள்ளி வந்த லாரிகள் பறிமுதல்

 

திருமங்கலம்: திருமங்கலம் அருகே அனுமதியின்றி வண்டல் மண் அள்ளி வந்த இரண்டு லாரிகளை ஆர்டிஓ பறிமுதல் செய்தார். திருமங்கலம் ஆர்டிஓ(பொ) ராஜகுரு நேற்று முன்தினம் கட்ராம்பட்டி கிராமத்தில் வாகன சோதனையில் இருந்த போது அந்த வழியாக வண்டல் மண் ஏற்றி கொண்ட வந்த இரண்டு லாரிகளை நிறுத்தி சோதனையிட்டார்.

மண் அள்ளுவதற்கான உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால் இரண்டு லாரிகளையும் பறிமுதல் செய்து திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் நிறுத்தினர். இதனையடுத்து ஆர்டிஓ உத்தரவுபடி திரளி விஏஓ ரவிச்சந்திரன் கொடுத்த புகாரில் திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியை சேர்ந்த டிரைவர் பிரவின்குமார், செக்கானூரணி கொக்குளத்தினை சேர்ந்த அய்யப்பன் ஆகியோரிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.

The post அனுமதியின்றி மண் அள்ளி வந்த லாரிகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: