எனவே ஜோர்டான், எகிப்து உள்ளிட்ட நாடுகள் அதிக எண்ணிக்கையில் அகதிகளை ஏற்று கொள்ள வேண்டும்.இது தற்காலிகமானதாக இருக்கலாம்.அல்லது நீண்ட காலத்துக்கு இருக்கலாம். ஜோர்டான் மன்னர் அப்துல்லாவுடன் இன்று(நேற்றுமுன்தினம்) பேசினேன். எகிப்து அதிபர் அப்தெல் பட்டா எல் சிசியுடனும் இது பற்றி பேச இருக்கிறேன். இஸ்ரேலுக்கு 2 ஆயிரம் பவுண்ட் எடை கொண்ட பெரிய வெடிகுண்டுகளை சப்ளை செய்வதற்கு முன்னாள் அதிபர் ஜோ பைடன் ஆட்சியில் விதிக்கப்பட்ட தடை இப்போது நீக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
அவர் மேலும் கூறுகையில்‘‘ உக்ரைன் போர் பிரச்னையை தீர்ப்பதற்கு ரஷ்ய அதிபர் புடினுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும்’’ என்றார். கடந்த ஆண்டு காசா மீதான இஸ்ரேல் தாக்குதல் தீவிரமடைந்ததால் அதிக எடை கொண்ட வெடிகுண்டுகளை இஸ்ரேலுக்கு கொடுக்கும் திட்டத்தை ஜோ பைடன் நிறுத்தி வைத்தார். இந்த வகை வெடிகுண்டுகளால் பொதுமக்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என்று அவர் இந்த முடிவை எடுத்தார். இஸ்ரேலை ஆதரிக்கும் டிரம்ப் அந்த வெடிகுண்டுகளை இஸ்ரேலுக்கு வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
The post காசாவில் இருந்து அதிகளவு அகதிகளை ஏற்று கொள்ள வேண்டும்: அரபு நாடுகளுக்கு டிரம்ப் வலியுறுத்தல் appeared first on Dinakaran.
