ராணுவச் சட்டத்தை அமல்படுத்தி திரும்பப் பெற்ற விவகாரத்தில் தென்கொரிய அதிபர் கைது!!

சியோல் : ராணுவச் சட்டத்தை அமல்படுத்தி திரும்பப் பெற்ற விவகாரத்தில் தென்கொரிய அதிபர் யூன் சுக் யோல் கைது செய்யப்பட்டார். நாடாளுமன்றத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் அதிபருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. 10 நாட்களுக்கு முன்பு அதிபரை கைது செய்ய சென்றபோது பாதுகாவலர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மோதல் காரணமாக அதிபரை கைது செய்ய முடியாமல் விசாரணை குழுவினர் திரும்பினர்.

The post ராணுவச் சட்டத்தை அமல்படுத்தி திரும்பப் பெற்ற விவகாரத்தில் தென்கொரிய அதிபர் கைது!! appeared first on Dinakaran.

Related Stories: