இதுகுறித்து இந்த இளம்பெண் கோயில் நிர்வாகத்திடம் புகார் அளித்தார். அதன்பேரில் மேலாளர் குமரவேல், பூக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அதில், செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த அந்த இளம்பெண், தனது தந்தை சபரிமலைக்கு செல்வதால், இருமுடி கட்ட இந்த கோயிலுக்கு வந்துள்ளார். இரவு நீண்ட நேரமானதால், இனிமேல் வீட்டிற்கு செல்ல முடியாது என்பதால், கோயில் மண்டபத்தில் படுத்து தூங்கியுள்ளார். அப்போது, காவலாளி ரமேஷ் இவரிடம் தவறாக நடந்தது தெரியவந்தது. அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
The post சபரிமலை சென்ற தந்தையை வழியனுப்ப வந்த போது கந்தகோட்டம் முருகன் கோயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: காவலாளி கைது appeared first on Dinakaran.