குட்கா விற்பனை 15 பேர் கைது

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பகுதியில் குட்கா விற்பனை செய்த 15 பேரை போலீசார் கைது செய்தனர். கவரப்பேட்டை, கும்மிடிப்பூண்டி, ஆரம்பாக்கம், பாதிரிவேடு, சிப்காட் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் போலீசார் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கூல்டிரிங்ஸ் உள்ளிட்ட கடைகளில் பதுக்கிய 50 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, கும்மிடிப்பூண்டி அசாருதீன்(32), மோகன்(42), செல்வராஜ்(53), ரமேஷ்(46), அசேன் அனில்(24), ஆத்துப்பாக்கம் விஜய்(25), பாலகிருஷ்ணாபுரம் பிரதீப்(41), விஜய் ஆனந்த்(37), சிந்தலகுப்பம் ஜெயச்சந்திரன்(48), ஜான்(30), ஆரம்பாக்கம் குணசேகர்(35), ஈகுவார்பாளையம் மோகன்(26), மாதர்பாக்கம் முத்து(43), விஜயகுமார்(50), கொண்டமாநெல்லூர் பாலசுந்தரம்(50) உள்ளிட்டோரை கைது செய்தனர்….

The post குட்கா விற்பனை 15 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: