சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட 39 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது. அக்டோபர் 1-ம் தேதி முதல் இன்று வரை இயல்பை விட 151.1 மி.மீ. கூடுதலாக 210.6 மி.மீ. வரை மழை பெய்துள்ளது. சென்னையில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட 47 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது.