இசை நிகழ்ச்சி டிக்கெட் மோசடி 5 மாநிலங்களில் ஈடி சோதனை

புதுடெல்லி: டெல்லியின் ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நேற்றும், இன்றும் நடிகர் மற்றும் பாடகரான தில்ஜித் தோசஞ்ஜியின் தில் லுமினதி இசைநிகழ்ச்சி நடைபெறுகிறது. மேலும் நவி மும்பையில் அடுத்த ஆண்டு ஜனவரியில் கோல்ட்பிளே இசைநிகழ்ச்சிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான டிக்கெட்டுகள் விரைவாக விற்பனையான நிலையில் ஆன்லைனில் மோசடி டிக்கெட் மூலமாக ரசிகர்கள் மற்றும் தனிநபர்கள் ஏமாற்றப்படுவதாக அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து பல்வேறு புகார்கள் வந்தன. மேலும் காவல் நிலையங்களிலும் டிக்கெட் மோசடி குறித்த புகார்கள் வந்துள்ளது. இதன் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் கிரிமினல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் 13 இடங்களில் சோதனை நடத்தினார்கள். டெல்லி, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், கர்நாடகா மற்றும் பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களில் அமலாக்கத்துறை சார்பில் சோதனை நடத்தப்பட்டது.

The post இசை நிகழ்ச்சி டிக்கெட் மோசடி 5 மாநிலங்களில் ஈடி சோதனை appeared first on Dinakaran.

Related Stories: