மபியில் சரக்கு ரயிலின் பெட்டிகள் கழன்று விபத்து

போபால்: மத்தியபிரதேசத்தில் ஜபால்பூர் மண்டலத்தில் இருந்து சரக்கு ரயில் ஒன்று உத்தரப்பிரதேசத்தின் ஆக்ரா நோக்கி சென்று கொண்டு இருந்தது. நிலக்கரியை ஏற்றி சென்ற சரக்கு ரயில் காட்னி மற்றும் பினா ரயில் நிலையங்களுக்கு இடையே வந்தபோது பெட்டிகளை இணைத்து இருக்கும் இணைப்பு கம்பி உடைந்ததில் சில சரக்கு பெட்டிகள் ரயிலில் இருந்து கழன்றுவிட்டதாக தெரிகிறது. இது குறித்து ரயில் மேலாளர் வாக்கி டாக்கி மூலமாக சரக்கு ரயில் ஓட்டுனருக்கு தகவல் கொடுத்துள்ளார். உடனடியாக சரக்கு ரயில் நிறுத்தப்பட்டுள்ளது. உடைந்த கம்பி சரிசெய்யப்பட்டு ரயிலில் இருந்து கழன்று தனியாக வந்த ரயில்பெட்டிகள் ஒன்றாக இணைக்கப்பட்டன. அதன் பின்னர் சரக்கு ரயில் புறப்பட்டு சென்றது.

The post மபியில் சரக்கு ரயிலின் பெட்டிகள் கழன்று விபத்து appeared first on Dinakaran.

Related Stories: