அதிராம்பட்டினம் அருகே கடற்கரையில் கிடந்த மெத்தபெட்டமைன்..!!

தஞ்சை: அதிராம்பட்டினம் அருகே கடற்கரையில் கிடந்த 950 கிராம் தூள் போன்ற பொருள் மெத்தபெட்டமைன் என கண்டறியப்பட்டது. கீழத்தோட்டம் கடற்கரையில் கிடந்த மர்ம பொருளை கடலோர காவல் குழும போலீசார் கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பினர். கைப்பற்றப்பட்ட மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பல கோடி ரூபாய் மதிப்புள்ளது என்று போலீஸ் தகவல் தெரிவித்துள்ளனர். மெத்தபெட்டமைன் போதைப்பொருள் எப்படி கடற்கரைக்கு வந்தது, கடல் மார்க்கமாக கடத்திச் செல்ல திட்டமா? என விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

The post அதிராம்பட்டினம் அருகே கடற்கரையில் கிடந்த மெத்தபெட்டமைன்..!! appeared first on Dinakaran.

Related Stories: