சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்துக்கு நிதி வழங்கிய ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி..!!

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்துக்கு நிதி அளித்ததற்காக ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது; சென்னை மெட்ரோ 2-ம் கட்டப் பணி தொடர்பாக ஒன்றிய அமைச்சர் மனோகர் லால் கட்டாருடன் ஆலோசனை நடத்தியதில் மகிழ்ச்சி அடைந்துள்ளேன்.

சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டத் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து விவாதித்தோம். எனது கோரிக்கையை ஏற்று 118.9 கிமீ விரிவாக்கத்திற்கு ஒப்புதல் அளித்ததற்காக ஒன்றிய அரசுக்கு எங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டதோடு, அதை விரைவாக செயல்படுத்துவதற்கான எங்களது முயற்சிகள் குறித்தும் விளக்கினோம். கோயம்புத்தூர் மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிதியுதவி அளிக்க ஒன்றிய அரசின் ஆதரவையும் கோரினேன். இவ்வரும் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

The post சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்துக்கு நிதி வழங்கிய ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி..!! appeared first on Dinakaran.

Related Stories: