அனைத்து ஊர்களிலும் மாநகராட்சி சார்பில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்றும் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மதுரையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மதுரையில் சில இடங்கள் மட்டுமே மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. மதுரையில் உள்ள அமைச்சர் மூர்த்தி, ஆட்சியரிடம் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து கேட்டறிந்தேன். மதுரையில் 8 இடங்களில் மட்டுமே மழைநீர் தேங்கி பாதிப்பு ஏற்பட்டுள்ளது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
The post மழை பாதிப்பு.. மதுரையில் முழு வீச்சில் நிவாரணப் பணிகள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!! appeared first on Dinakaran.